மார்ச் மாதத்திற்குள் 3 செயற்கைக்கோள் ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் டாக்டர். கே. சிவன்

மார்ச் மாதத்திற்குள் 3 செயற்கைக்கோள் ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் டாக்டர். கே. சிவன்  தெரிவித்தார்.


கார்ட்டோசாட் – 3 செயற்கைக்கோள்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோவின் தலைவர் டாக்டர்.கே.சிவன், பிஎஸ்எல்வி – சி 47 ராக்கெட் மூலம் கார்ட்டோசாட் – 3 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.


கார்ட்டோசாட் – 3 மற்றும் அதனுடன் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் அவற்றின் புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்டதாகக்  கூறினார். கார்ட்டோசாட் – 3 செயற்கைக்கோளில் துல்லியமாக படமெடுக்கக்கூடிய அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய திட்ட இயக்குநர் மற்றும் ஒட்டுமொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அவர் தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 


இஸ்ரோ விஞ்ஞானிகள் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு  வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பார்கள் என்றும் டாக்டர்.சிவன் தெரிவித்தார்.


அடுத்த கட்டமாக, வருகிற மார்ச் மாதத்திற்குள் 13 திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு.சிவன் குறிப்பிட்டார். 6 செலுத்து வாகனங்கள் மற்றும் 7 செயற்கைக்கோள்கள் மார்ச் மாதத்திற்குள் விண்ணில் செலுத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.


Popular posts
ராணிப்பேட்டை அருகே காலணி தொழிற்சாலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
Image
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி நிர்வாக மற்றும் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு தொழிலாளருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது
Image
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள் திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த கள்ளக்கடை மார்க்கெட்டை பொதுமக்களிடம் சமூக விலகல் இருக்க வேண்டும் என்பதற்காக காந்திநகர். திருக்கோயிலூர் சாலை . அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானம் .ஆகிய இடங்களுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது இந்த நிலையில் தற்காலிகமா அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சமூக விலகளை கடைப்பிடிக்காமல் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை மற்றும் 8 .வயதுள்ள குழந்தைகளை கொரோனா அச்சம் சிறிதுமின்றி காய்கறி மார்க்கெட்டுக்கு அழைத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Image
வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர்
Image
சிவகங்கை வாணியங்குடி கிராம சேவை மையத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டம் மூலம்
Image